பெரம்பலூரில் ரௌடி இயக்குனர் கொலை செய்யப்பட்ட விவகாரம்; பாஜக மாவட்ட துணைத்தலைவர் அதிரடி கைது.!

பெரம்பலூரில் ரௌடி இயக்குனர் கொலை செய்யப்பட்ட விவகாரம்; பாஜக மாவட்ட துணைத்தலைவர் அதிரடி கைது.!



Perambalur BJP Deputy District leader Arrested Rowdy Murder Case 

 

பெரம்பலூர் நகராட்சி பகுதியில் வசித்து வந்த திரைப்பட இயக்குனர் செல்வராஜ் என்ற அப்துல் ரகுமான் (வயது 45). இவர் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி கொலை செய்யப்பட்டார். இவர் இயக்குனராக இருந்தாலும், ரௌடி என்று கூறப்படுகிறது. பல காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளன.

நண்பர்களுடன் மதுபானம் அருந்திய செல்வராஜ் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இவ்வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. 

Perambalur

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், பெரம்பலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் ஜெயபாலாஜி (வயது 43) ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். 

இவரின் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, தலைமறைவாக இருந்தவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.