திருமணம் அப்போதுதான்.. ஓப்பனாக போட்டுடைத்து நடிகை சதா சொன்ன விஷயம்.! ரசிகர்கள் ஷாக்!!
அதிகாலையில் பெய்த மழையால் மக்கள் பெருமகிழ்ச்சி! இந்த மழை தொடருமா? வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் நீண்ட நாட்களாக மழை பெய்யாததால் தமிழக மக்கள் பெரும் அவதிப்பட்டுவந்தனர். இதனால் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் தவித்து வந்தனர் குறிப்பாக சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிக்க நீரில்லாமல் மக்கள் கடும் அவஸ்தை பட்டுவந்தனர்.
இந்தநிலையில் சில நாட்களாக தமிழகத்தின் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் விட்டு விட்டு பரவலாக கனமழை பெய்து வந்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னை மக்கள் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்புறம் இருந்த தண்ணீரை பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.
நேற்று சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சில இடங்களில் மிதமான இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்த நிலையில், நள்ளிரவு பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது மழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.