அக்காவை போட்டுத் தள்ளிவிட்டு... இறுதி ஊர்வலத்தில் குத்தாட்டம் போட்ட தங்கை... ஷாக்கிங் வீடியோ.!

அக்காவை போட்டுத் தள்ளிவிட்டு... இறுதி ஊர்வலத்தில் குத்தாட்டம் போட்ட தங்கை... ஷாக்கிங் வீடியோ.!



oman-who-murder-her-sister-danced-at-her-sister-funeral

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ராஜேஸ்வரி என்ற பெண் கொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரித்து வந்த எழும்பூர் காவல்துறையினர் அந்தப் பெண்மணியின் தங்கையை கைது செய்தனர்.

இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ராஜேஸ்வரியை கூலிப்படை வைத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார் நாகவள்ளி.  இந்நிலையில் அவரைப் பற்றிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

tamilnaduதனது அக்கா ராஜேஸ்வரியின் இறுதிச்சடங்கின் போது இவர் குத்தாட்டம் போடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. அக்காவை கொலை செய்து விட்டு அந்த குற்ற உணர்ச்சியே இல்லாமல்  சாவு மேலத்திற்கு அவர் ஆடும் ஆட்டம்  பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வைரல் செய்து வருகின்றனர். இந்தக் கொலையில் நாகவள்ளி  மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்ததாக ஐந்து பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்திருக்கிறது.