கங்குவா ரிலீஸ் எப்போ?? சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ் சொன்ன முக்கிய பிரபலம்!!
தாய் செய்யுற வேலையா இது.. பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை.!
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் தாய் புவனேஸ்வரி மற்றும் அவருடைய தந்தை இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் அந்த மாணவி தனது அத்தையின் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.
பள்ளி விடுமுறை நாட்களில் மட்டும் தனது தாய் புவனேஸ்வரி வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அதன்படி, விடுமுறை என்பதால் மாணவி தனது தாய் தங்கி இருக்கும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்த வீட்டிற்கு வந்த சக்திவேல் என்ற நபர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதற்கு அந்த சிறுமியின் தாய் புவனேஸ்வரியும் உடந்தையாக இருந்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் அத்தை ஜியபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வந்த புகாரி அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சக்திவேல் மற்றும் புவனேஸ்வரி ஆகிய இருவர் மீதும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.