மூர்ச்சையான குரங்குக்கு சிபிஆர் கொடுத்து உயிர்த்தெழச்செய்த நபர்; வைரலாகும் வீடியோ.!



Monkey Saved by man Old Video Now Trending 


குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற கூற்று இருந்தாலும், மனிதனின் பரிணாம வளர்ச்சி அபரீதமாக இருக்கிறது. தொடர்ந்து பல படைப்புகள், வானியல் கண்டுபிடிப்புகள் என எதிர்காலம் அடுத்தகட்டத்தை நோக்கி பயணம் செய்கிறது. 

உலகளாவிய ஆராய்ச்சிகள் ஒருபுறம் ஆகிரமிப்பை ஏற்படுத்தினாலும், அன்றாட வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் இடர்கள் ஏராளம். அதிலும் விலங்குகளின் நிலைமையும் அதேதான். ஆனால், மனிதன் மனிதத்துக்கு உவமையாக பல இடங்களில் செயல்பட்டு இருக்கிறான். 

சிபிஆரால் உயிர்த்தெழுந்த குரங்கு:

அந்த வகையில், மயக்கமடைந்த குரங்கு ஒன்றுக்கு சிபிஆர் சிகிச்சை அளித்து அதனை உயர்த்தெழச்செய்த சம்பவம் நடந்துள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் 2021 ல் பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த இந்த நெகிழ்ச்சி செயலின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதனை காப்பாற்றிய பிரபுவுக்கு பாராட்டுகளையும் குவிக்கிறது.