வேன் ஓட்டுனரை காதலித்த டாக்டர் மாணவி..! 5 வருட காதல்..! காவல் நிலையத்தில் தஞ்சம்.! கெஞ்சிய தந்தை..! இறுதியில் நடந்த சோகம்.!
வேன் ஓட்டுனரை காதலித்த டாக்டர் மாணவி..! 5 வருட காதல்..! காவல் நிலையத்தில் தஞ்சம்.! கெஞ்சிய தந்தை..! இறுதியில் நடந்த சோகம்.!
திருவெறும்பூர் ஒன்றிய திமுக மகளிரணி நிர்வாகியாக இருப்பவர் ராதா புலிகேசி. இவரது மகள் காருண்யா (22) என்பவரும் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த வீரமணி (24) என்பவரும் கடந்த சில வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
காருண்யா இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வரும் நிலையில், விரைவில் மருத்துவராக ஆக இருக்கும் காருண்யா வேன் ஓட்டுநராக வீரமணியை காதலித்துவந்துள்ளார். இந்த தகவல் இருவரின் பெற்றோருக்கும் தெரியவர பெற்றோர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து காதலர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கடந்த 1ம் தேதி சமயபுரத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே ராதா புலிகேசி தனது மகள் காருண்யாவை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரனை செய்துவந்தனர்.
இந்நிலையில் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்ததை அடுத்து திருவெறும்பூர் போலீசார் இருவரின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பெண்ணின் தந்தை தன்னுடைய மகளை தன்னுடன் அழைத்துச்செல்ல எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை.
காதலர்கள் இருவரும் ஓன்று சேர்ந்து வாழ்வதில் மிக உறுதியாக இருந்ததை அடுத்து இருதரப்பிலும் எழுதி வாங்கிக்கொண்டு போலீசார் அவர்களை அனுப்பிவைத்தனர்.