வாணியம்பாடியில் பயங்கரம்... எமானாக மாறிய சகலை.!! கள்ள காதல் படுகொலை!



man-murdered-in-extra-marital-affair-issue-police-arres

திருப்பத்தூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சியளிக்கும் உண்மை சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட இர்ஃபான்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் இர்ஃபான். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம்  சைக்கிளில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த இர்ஃபானை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த நபர் கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றான். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த இர்ஃபான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

tamilnadu

சிக்கிய சகலை

இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இர்ஃபான் மனைவியின் தங்கை கணவரான சல்மான் என்பவர் இர்ஃபானை கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பெங்களூரில் பதுங்கியிருந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது. சல்மான் மற்றும் இர்ஃபானின் மனைவி ஹாஜிரா ஆகியோருக்கிடையே இருந்த திருமணத்தை மீறிய உறவு கொலைக்கு காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க: நெல்லையில் பயங்கரம்... காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை.!! 3 சிறுவர்கள் கைது.!!

விசாரணையில் வெளியான உண்மை

காவல்துறை விசாரணையில் கொலையாளி சல்மான் மற்றும் கொலை செய்யப்பட்ட இர்ஃபானின் மனைவி ஹாஜிரா ஆகியோருக்கிடையே கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்திருக்கிறது. மேலும் இது தொடர்பாக சல்மானின் மனைவி கடந்த வருடம் காவல்துறையிலும் புகார் செய்திருக்கிறார். அப்போது காவல்துறையினர் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் சல்மான், இர்ஃபானின் மனைவி ஹாஜிராவை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் இர்ஃபானின் மனைவி வெளிநாட்டிலிருந்து வந்த பிறகு சல்மானுடன் வாழ இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இர்ஃபானின் குழந்தைகளையும் சல்மான் பொறுப்பில் எடுத்து வளர்க்குமாறும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இர்ஃபான் வீட்டிற்கு சென்ற சல்மான் அவரது குழந்தைகளை அழைத்து வர முயன்ற போது இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சல்மான், இர்ஃபானை கொலை செய்துள்ளார்.

இதையும் படிங்க: திருச்சியில் சோகம்... கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து.!! பரிதாபமாக பலியான டிரைவர்.!!