போதையின் உச்சம்..! ஆசனவாய் வழியாக தன் வயிற்றுக்குள் தானே குவார்ட்டர் பாட்டிலை நுழைத்த இளைஞன்..! ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து பதறிய மருத்துவர்கள்.!

போதையின் உச்சம்..! ஆசனவாய் வழியாக தன் வயிற்றுக்குள் தானே குவார்ட்டர் பாட்டிலை நுழைத்த இளைஞன்..! ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து பதறிய மருத்துவர்கள்.!



man-insert-bottle-into-stomach

நபர் ஒருவர் குடிபோதையில் மதுபாட்டில் ஒன்றை ஆசன வாய் மூலம் தானே வயிற்றுக்குள் நுழைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் நாகூர் பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி. 29 வயதான பக்கிரிசாமி மது போதைக்கு அடிமையாக இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவால் மதுக்கடைகள் மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்டநிலையில் தினமும் குடிப்பதையே வாடிக்கையாக வைத்திருந்துள்ளார் பக்கிரிசாமி.

இந்நிலையியல் சமீபத்தில் அளவுக்கு மீறி மதுகுடித்த பக்கிரிசாமி போதை தலைக்கேறிய நிலையில், கடைசி குவாட்டர் பாட்டிலை எங்கே பாதுகாப்பாக வைப்பது என்று தெரியாமல் தவித்து வந்துள்ளார். உடனே தன்னிடம் இருந்த மதுபாட்டிலை எடுத்து தனது ஆசனவாயில் சொருகியுள்ளார்.

அதன்பின்னர் மதுபோதையில் அவர் போட்ட ஆட்டத்தில் மதுபாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக ஆசனவாய் மூலம் வயிற்றுக்குள் சென்றுள்ளது. இதனால் அடுத்தநாள் கடும் வயிற்றுவலி ஏற்பட்டு உயிருக்கு போராடிய பக்கிரிசாமியை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு பக்கிரிசாமியின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் உள்ளே மதுபாட்டில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்பின்னர் அறுவை சிகிச்சை இல்லாமல், இனிமா கொடுத்து 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மதுபாட்டிலை வெளியே எடுத்து பக்கிரிசாமியை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.