காதலிக்க மறுத்த இளம் பெண்ணிற்கு இளைஞர் செய்த காரியம்! துடி துடித்த இளம் பெண்!

காதலிக்க மறுத்த இளம் பெண்ணிற்கு இளைஞர் செய்த காரியம்! துடி துடித்த இளம் பெண்!



Man fired his girl friend for love problem in trichy

தன்னை காதலிக்க மறுத்த தோழியை அவரது நண்பரே பெட்ரோல் ஊறி தீ வைத்து எரிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் பட்டீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவரது மகள் ரம்யா. இவர் திருச்சியில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் படித்துவருகிறார்.

இவர் அவரது கல்லூரி தோழிகளுடன் திருச்சி காஜா மலையில் வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் ரம்யாவுக்கும், சென்னையில் பணியாற்றி வரும் தமிழ்ச்செல்வன் என்பவரும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்ச்செல்வன் ரம்யாவை காதலிப்பதாக கூற, அதற்கு ரம்யா மறுத்துள்ளார். இதனால் ரம்யா தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்த தமிழ்ச்செல்வன் தன்னை காதலிக்குமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளார். ஆனால், ரம்யா மீண்டும் மறுக்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.

Crime

ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த தமிழ் செல்வன் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ரம்யா மீது ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் தீ காயமடைந்த ரம்யாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள தமிழ் செல்வனை வலைவீசி தேடி வருகின்றனர்.