தல ரசிகர்களே ரெடியா.. அஜித் பிறந்தநாளில் டிரிபிள் ட்ரீட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்!
மனுஷன் சுடுகாட்டுலையே போய் படுத்துக்குவாரு!! மனைவி இறந்த சோகத்தில் கணவன் செய்த செயல்!!
மனுஷன் சுடுகாட்டுலையே போய் படுத்துக்குவாரு!! மனைவி இறந்த சோகத்தில் கணவன் செய்த செயல்!!
மனைவி இறந்த சோகத்தில் கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குக்குட்டி அருகே உள்ள குப்பகுடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தவேல் (வயது 52). இவரது மனைவி லட்சுமி உடல்நல குறைவால் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். மனைவியின் பிரிவை தாங்கிக்கொள்ளமுடியாத அமிர்தவேல் தொடர்ந்து மனஉளைச்சலில் இருந்துவந்துள்ளார்.
மேலும், மனைவியை அடக்கம் செய்த இடத்திற்கு சென்று அழுது புலம்புவது, பல நேரங்களில் அங்கையே தூங்கிவிடுவது என இருந்துவந்துள்ளார். இந்நிலையில் மனவேதனை தாங்க முடியாமல், அமிர்தவேல் சுடுகாட்டில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், இந்த சம்பவமானது அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.