2 முறை கர்ப்பமாக்கிவிட்டு இளம்பெண்ணிற்கு டிமிக்கி கொடுத்த மதபோதகர்.! போலீசில் பரபரப்பு புகார்.!

2 முறை கர்ப்பமாக்கிவிட்டு இளம்பெண்ணிற்கு டிமிக்கி கொடுத்த மதபோதகர்.! போலீசில் பரபரப்பு புகார்.!


man cheated young girl

ஈரோடு மாவட்டம் மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில், ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் வசித்து வரும் நான், சில ஆண்டுகளுக்கு முன் காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று வருவேன். அப்போது அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஆண் ஒருவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் ஒருநாள் அவர், என்னுடைய தாயாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவரை அருகில் இருந்து கவனிக்கமுடியுமா என்று கேட்டார். அதற்க்கு நானும் சம்மதித்து கடந்த 2017-ம் ஆண்டு அவர் வீட்டுக்கு சென்று அவரது தாய்க்கு உதவியாய் இருந்தேன். அந்த சமயத்தில் அவர் என்னிடம் நெருங்கி பழகி உறவில் ஈடுபட்டார். இதனால் நான் கர்ப்பமடைந்தேன். பின்னர் நான் உன்னையே திருமணம் செய்துகொள்கிறேன் என்று அவர் என்னிடம் கூறி சமாதானப்படுத்தி கர்ப்பத்தை கலைக்க வைத்தார்.

பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் அவர் என்னிடம் உல்லாசமாக இருந்தார். இதனால் மீண்டும் கர்ப்பமானேன். இதைத்தொடர்ந்து மறுபடியும் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று தன்னை மனைவி என்று மருத்துவர்களிடம் கூறி கர்ப்பத்தை கலைக்க வைத்தார். இதனையடுத்து என்னை திருமணம் செய்து கொள்ள அவரை வற்புறுத்தினேன். அப்போது அவர் வேதம் படித்து வருகிறேன் என்று மகாராஷ்டிரா மாநிலம் சென்றுவிட்டார். தற்போது அவர் மதபோதகராக திரும்பி வந்துள்ளார்.

தற்போது அவரிடம் சென்று என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றேன். அதற்கு அவர் இப்போது நான் மதபோதகர். உன்னை திருமணம் செய்ய முடியாது என்று மறுக்கிறார். அதனால் அவர் மீதும், கர்ப்பத்தை கலைக்க உதவிய அவருடைய தந்தை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்