1 இல்ல 2 இல்ல.. பல பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த தொழிலாளி!! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..

1 இல்ல 2 இல்ல.. பல பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த தொழிலாளி!! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..



Man abused so many girls

வறுமையில் உள்ள பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள தயிர்பாளையத்தை சேர்ந்தவர் புவனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவனை இழந்த புவனா அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்தபடி விசைத்தறி கூடத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் புவனா ஒருநாள் தனது பக்கத்துக்கு வீடு பெண்களிடம் சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் டிப் டாப்பாக ஒருவர் வந்துள்ளார்.

அங்கிருந்த பெண்களிடம், தனக்கு இந்த பகுதியில் வீடு வாடகைக்கு கிடைக்குமா என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் இந்த பகுதியில் வீடு ஏதும் வாடகைக்கு இல்லை என கூறியுள்ளனர். உடனே அந்த நபர், தனது பெயர் குமார் எனவும், தான் ஒரு நிதிநிறுவன அதிபர் எனவும், குறிப்பாக பெண்களுக்கு மட்டும் பணம் வட்டிக்கு கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இதனை கேட்ட அந்த பெண்கள், தங்களுக்கும் வட்டிக்கு பணம் கிடைக்குமா என கேட்க, அதற்கு குமார் தன்னுடைய முகவரி அட்டையை கொடுத்து, அந்த பெண்களின் செல்போன் எண்களையும் பெற்றுக்கொண்டு, உங்களுக்கு பணம் கொண்டு வந்து கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

இதனை அடுத்து மறுநாள் புவனாவுக்கு போன் செய்த குமார், தேர்தல் நேரத்தில் சில அரசியல்வாதிகள் தன்னிடம் கருப்பு பணத்தை கொடுத்ததாகவும், அதனை வட்டிக்கு விட்டுவருவதாகவும், தனது நிதி நிறுவனத்தில் வேலை செய்ய ஒரு அழகான பெண் வேண்டும் இருந்தால் சொல்லு, அதற்கும் பணம் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

குமாரின் பேச்சால் சந்தேகமடைந்த புவனா இதுகுறித்து பக்கத்துக்கு வீடு பெண்களிடமும் தெரிவிக்க, உடனே அவர்கள் இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்கள். பின்னர் இந்த புகார் கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்துக்கு அனுப்பப்பட்டு, குமாரை பிடிக்க போலீசார் திட்டம் தீட்டினர்.

அதன்படி, குமாரை புவனா வீட்டிற்கு வரவைத்து பிடிக்க போலீசார் திட்டம் போடுவதை அறிந்த குமார், புவனாவுக்கு போன் செய்து, உன்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனை அடுத்து குமாரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர், கவுந்தப்பாடிபுதூர் வையாபுரி வீதியை சேர்ந்த செல்வன் (42) என்பதும், தறிப்பட்டறை தொழிலாளியான செல்வத்துக்கு  ஏற்கனவே 2 மனைவிகள் மற்றும் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.

வேலைக்கு செல்லாமல், டிப் டாப்பாக உடையணிந்து சுற்றிவந்த செல்வம், தான் ஒரு நிதிநிறுவன அதிபர் எனவும், வட்டிக்கு பணம் தருவதாக பல ஏழை பெண்களிடம் கூறி, அவர்களில் யார் தனது ஆசைக்கு இனக்குகிறார்களோ அவர்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு அவர்களை ஏமாற்றி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

செல்வத்தின் தொலைபேசியை ஆய்வு செய்ததில், செலவும் இதுபோன்று பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தது தெரியவந்தநிலையில், தற்போது செல்வம் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.