தங்கையிடம் அத்துமீறிய காதலன்.. கோபப்படாமல், தானும் கற்பழித்து சீரழித்த 14 வயது அண்ணன்..! மதுரையில் அதிர்ச்சி சம்பவம்.!!

தங்கையிடம் அத்துமீறிய காதலன்.. கோபப்படாமல், தானும் கற்பழித்து சீரழித்த 14 வயது அண்ணன்..! மதுரையில் அதிர்ச்சி சம்பவம்.!!



madurai-sister-abused-by-own-brother-first-sexually-abu

சொந்த சகோதரியை உடன் பிறந்த சகோதரி பாலியல் பலாத்காரம் செய்த அவலம் மதுரை அருகே நடந்துள்ளது. இந்த வழக்கில் சிறுமியின் சகோதரன், காதலன் என 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த 13 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மதுரை மாநகர ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, மதுரை நகர அனைத்து மகளிர் நிலைய காவல் துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 

விசாரணையில், சிறுமிக்கு 13 வயதாகும் நிலையில், தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவருடன் பயிலும் தோழி வீட்டிற்கு அவ்வப்போது சிறுமி சென்று வந்துள்ளார். அப்போது, தோழியின் சகோதரரான சரவணன் (வயது 20) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

கடந்த அக். மாதம் சிறுமி தோழியின் வீட்டிற்கு சென்ற போது, தோழியின் அண்ணனான சரவணன் சிறுமிக்கு திருமண ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனைத்தொடர்ந்து, சிறுமியின் வீட்டிற்கு சென்றே சரவணன் சிறுமியை தனிமையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

madurai

இந்நிலையில், தங்கையை சரவணன் பாலியல் பலாத்காரம் செய்த தகவல் சிறுவியின் சகோதரனுக்கு தெரியவர, அவன் தங்கையின் வாழ்க்கையை காப்பாற்ற நினைக்காமல், தானும் மிரட்டி தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான். இதனால் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

சிறுமியின் பெற்றோர் அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்கையில், மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையின் முடிவில் சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதியானது. சிறுமியின் பெற்றோர்களிடம் புகாரை பெற்ற காவல் துறையினர், சரவணன் மற்றும் சிறுமியின் உடன்பிறந்த சகோதரரான 14 வயது சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.