மதுபானங்களின் வரிகள் அதிரடி உயர்வு! மீண்டும் அதிர்ச்சியில் குடிமகன்கள்!

மதுபானங்களின் வரிகள் அதிரடி உயர்வு! மீண்டும் அதிர்ச்சியில் குடிமகன்கள்!



liquor-tax-increased

தமிழகத்தின் டாஸ்மாக் விலைக்கு நிகராக புதுச்சேரியில் மதுபானங்கள் விலையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நேற்று புதுச்சேரியில் மதுபானங்கள் விற்க அனுமதி அளித்து கிரண்பேடி ஒப்புதல் அளித்திருந்தார். இந்த நிலையில் புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வு அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

liquorதமிழகத்தில் விற்கப்படாத மதுபானங்களை புதுச்சேரியில் விற்றால் கூடுதலாக 25% கொரோனா வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் விற்கப்படும் சாராயத்துக்கும் 20% கொரோனா வரி விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வரி விதிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டைவிட புதுச்சேரியில் மதுபானங்களின் விலை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த மதுபிரியர்கள் புதுச்சேரிக்கு வருவதை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.