தம்பி மனைவி மீது மோகம்.. கண்டித்தவர் அடித்துக்கொலை.. பதறவைக்கும் பரபரப்பு சம்பவம்..!

தம்பி மனைவி மீது மோகம்.. கண்டித்தவர் அடித்துக்கொலை.. பதறவைக்கும் பரபரப்பு சம்பவம்..!



krishnagiri-men-murder-case-issue

மச்சினிச்சியிடம் தவறாக நடக்க முயன்ற மூத்தாரை கண்டித்த காரணத்தால், ஒரு நபர் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நரணிகுப்பம் பகுதியில் வசித்து வருபவர் நரசிம்மமூர்த்தி (வயது 45). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் இருந்த நிலையில், கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 10 வருடங்களுக்கு முன்பு அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில், குடும்பத்தை இழந்து ஆதரவற்றிருந்த நரசிம்மமூர்த்தியை, அவரது தம்பி தன்னுடைய வீட்டில் தங்கவைத்து கவனித்து வந்துள்ளார். ஆனால், இதனை நினைத்து பார்க்காமல், நரசிம்மமூர்த்தி தம்பி இல்லாத சமயங்களில் அவரது மனைவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். 

Krishnagiri

இதனை சுமித்ரா கண்டித்தும், மீண்டும் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், பொறுமை இழந்த அவர் நடந்த விஷயங்களை தனது கணவரிடம் கூறினால் பிரச்சினை ஏற்படும் என எண்ணி, அவருடைய அக்கா கணவர் திம்மராஜிடம் கூறியுள்ளார்.

இதனால் திம்மராஜ், நரசிம்மமூர்த்தியை கண்டித்துள்ளார். இந்த விஷயம் அக்கம்பக்கத்தினருக்கு தெரியவர, கோபமடைந்த நரசிம்மமூர்த்தி திம்மராஜை எப்படியாவது பழிவாங்கவேண்டும் என்ற கொலை வெறியுடன் இருந்துள்ளார். சம்பவ தினத்தன்று, செல்வராஜின் வீட்டிற்கு திம்மராஜ் வருவதாக நரசிம்மமூர்த்திக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர் ஊருக்குள் நுழையும் முன்பே வழிமறித்து வாக்குவாதம் செய்துள்ளார். 

Krishnagiri

அப்போது வாக்குவாதமானது கைகலப்பாக மாறிய நிலையில், அருகிலிருந்த கட்டையை எடுத்து திம்மராஜை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நரசிம்மமூர்த்தி மீது வழக்குப்பதிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் நடந்த உண்மை அனைத்தையும் ஒப்புக்கொண்டதால் கைது செய்து சிறையில் அடைத்தனர்.