தீக்குழியில் தவறி விழுந்த கோவில் பூசாரி படுகாயம்.!
தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் கருமாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இங்கு சில தினங்களாக திருவிழா நடைபெற்ற வருகிறது. கருமாரியம்மன் கோவிலின் பூசாரியாக 67 வயதுடைய மாரியப்பன் இருந்து வருகிறார்.
இதனால், தீமிதி திருவிழா நடைபெற்ற அன்று கோவில் பூசாரி மாரியப்பன் பூக்குழி இறங்கியுள்ளார். அப்போது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பூக்குழி அருகில் நின்று கொண்டிருந்த உதயா சிங் மற்றும் விழா குழுவினர்கள் நெரிசல் காரணமாக பூசாரி மாரியப்பனை எதிர்பாராத விதமாக தள்ளியுள்ளார்.
இதனால் நிலை தடுமாறிய பூசாரி மாரியப்பன், தீ குழியில் விழுந்து விட்டார். இதனால் அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனே, அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.