ஆசையாக வாங்கிச்சென்ற ஸ்வீட்க்குள் புழு.. அதிர்ந்துபோன வாடிக்கையாளர்., அசால்ட்டாக பதில் சொன்ன பேக்கரி.!

ஆசையாக வாங்கிச்சென்ற ஸ்வீட்க்குள் புழு.. அதிர்ந்துபோன வாடிக்கையாளர்., அசால்ட்டாக பதில் சொன்ன பேக்கரி.!



Kanyakumari Arumanai Sweet Shop

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனையில் சென்னை மன்னா ஸ்வீட்ஸ் & பேக்கரி கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனை செய்யப்பட்ட இனிப்பு வகை பலகாரத்தை வாடிக்கையாளர் நேற்று தனது வீட்டிற்கு வாங்கி சென்றுள்ளார். 

பின்னர், அதனை குடும்பத்தோடு எடுத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்த நிலையில், இனிப்பு பலகாரத்தில் புழு இருந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர் அதனை கையோடு தூக்கிக்கொண்டு பேக்கரிக்கு சென்று சண்டையிட்டுள்ளார். 

இதனை கடையின் ஊழியர்களிடம் தெரிவித்தபோது, அவர்கள் தங்களின் மீதான குற்றசாட்டை மறுத்துள்ளனர். இதனால் இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆய்வு நடத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் தற்போது வரை எந்த ஆய்வு நடத்தவில்லை.