மதுபோதையில் வெறிச்செயல்.. பெற்ற மகனுக்கு கொல்லி வைக்க தந்தை செய்த துணிகரம்? பதறவைக்கும் கொடூரம்.!



Kanchipuram Man Arrested for Allegedly Stabbing Son to Death After Drunken Argument

போதை தகராறில் தந்தை மகனை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

டாட்டூ கலைஞர்:

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காமாட்சி அம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஏழுமலை (வயது 50). இவர் பூ, மாலை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரின் மகன் ரூபேஷ் (வயது 25). சென்னையில் டாட்டூ கலைஞராக வேலை பார்த்து வருகிறார்.

இதையும் படிங்க: சோறு சமைக்கலையா? 56 வயது கள்ளக்காதலியை குத்திக்கொன்ற 28 வயது இளைஞர்.. திடுக் சம்பவம்.!

வாக்குவாதம்:

இதனிடையே, நேற்று இரவு நேரத்தில் போதையில் வீட்டுக்கு வந்த ரூபேஷ் - தந்தை இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஏழுமலை, கத்தியை எடுத்து மகன் ரூபேஷை சரமாரியாக குத்தி இருக்கிறார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார்.

Crime news

கொலை:

இவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், ரூபேஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததை உறுதி செய்தனர். இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், ஏழுமலையை கைது செய்தனர்.

இதையும் படிங்க: பர்த்டேவில் நடந்த சோகம்.. ரூ.3,000 கடனுக்காக கல்லால் தாக்கி துள்ளத்துடிக்க கொடூர கொலை.. சென்னையில் ஷாக்.!