பிட்டடித்து மாட்டியதால் பரிதாபம்.. அவமானமாக எண்ணி 9ஆம் வகுப்பு மாணவி விபரீதம்..! கண்ணீரில் பெற்றோர்..!
பிட்டடித்து மாட்டியதால் பரிதாபம்.. அவமானமாக எண்ணி 9ஆம் வகுப்பு மாணவி விபரீதம்..! கண்ணீரில் பெற்றோர்..!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் வசித்து வருபவர் சுரேஷ். இவரின் மகள் கஜாசுபமுத்ரா (வயது 14). இவர் மாமல்லபுரத்தில் இருக்கும் பூஞ்சேரி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் பாட செய்முறை தேர்வு நடந்துள்ளது.
இந்த தேர்வில் மாணவி கஜசுபமித்ரா பிட் அடித்து கையும் களவுமாக சிக்கிக்கொண்டுள்ளார். இதனையடுத்து, ஆசிரியை மாணவிக்கு அறிவுரை கூறி கண்டிக்கவே, மறுநாள் காலை வரும்போது பெற்றோரை உடன் அழைத்துவர அறிவுறுத்தியுள்ளனர்.
இதன்காரணமான என்ன செய்வதென்று தெரியாமல் பதறிய மாணவி திடீரென்று பள்ளியின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக அவரை மீட்ட ஆசிரியர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டதை தொடர்ந்து இடுப்பெலும்பு முறிந்ததால், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அறிந்த செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா நேரடியாக பள்ளிக்கு சென்று விசாரித்தார். மேலும், மாமல்லபுரம் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.