மாணவியை கற்பழித்து, நண்பர்களுக்கு வீடியோவாக அனுப்பிய நபர்! பெற்றோரிடம் வசமாக சிக்கிய கதை!

மாணவியை கற்பழித்து, நண்பர்களுக்கு வீடியோவாக அனுப்பிய நபர்! பெற்றோரிடம் வசமாக சிக்கிய கதை!



Kadaloor boy rapped school girl and spread the video

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரபெருமாநல்லூர் பகுதியியில் வசித்துவரும் மாணவி கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சதிஷ் என்ற வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனால் காதலன் சதிஷ் சொல்லும் அனைத்தையும் கேட்டுள்ளார் கீதா.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி விடுமுறையின் போது, மாணவியை ஆசை வார்த்தை கூறி பள்ளி வளாகத்திற்கு வரவழைத்த சதிஷ் கீதாவிற்கு தெரியாமல் அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.

Boy raped school girl

குளிர்பானத்தை அருந்திய சில நிமிடங்களில் மயக்கம் அடைந்துள்ளார் கீதா. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சதிஷ் அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் அதை வீடியோவாக பதிவு செய்து தனது நண்பர்குளும் பகிர்ந்துள்ளார்.

 வாட்ஸ்-அப் மூலம், இந்த வீடியோ பலருக்கும் பரவ இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கும் தெரிய வந்தது. எனவே, இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்படி, சதீஷை கைது செய்த போலீசார் அவரை கடலூர் சிறையில் அடைத்தனர்.