கோவிலுக்கு சென்ற குடும்பத்துக்கு இப்படியா நடக்கணும்? சாம்பிராணி புகையால் கிளம்பிய தேனீ.. ஒருவர் பலி.!



in Vellore a Man Died Honey Bee Bite 

குலதெய்வ கோவிலுக்கு சென்றவர் தேனீ கடித்து உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அருகே இருக்கும் கிராமத்தில் வசித்து வருபவர் செந்தில் (30). இன்று செந்தில் தனது குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்றார். 

அங்கு அனைவரும் பொங்கல் வைத்து, பின் சாம்பிராணி ஏற்றி வழிபாடு செய்தனர். சாம்பிராணியில் இருந்து வந்த புகை காரணமாக, அரசமரத்தின் தேனீக்கள் கலைந்தன.

இதையும் படிங்க: அண்ணன்-தம்பி சொத்து தகராறில், 14 வயது சிறுமி கொலை முயற்சி.. வேலூரில் அதிர்ச்சி.!

vellore

மருத்துவமனையில் அனுமதி

கலைந்த தேனீக்கள் குலதெய்வ வழிபாடு செய்ய வந்த நபர்களை தாக்கியது. இதில் படுகாயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். 

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செந்தில் குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விஷயம் அவரின் குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. 
 

இதையும் படிங்க: சாலையில் இருந்த வைக்கோலால் தீப்பிடித்த கார்; உயிரே போயிருக்கும்.. பெண் ஆதங்கம்.!