விஜய் டிவி ராசித்தா ரசிகரா நீங்க!!! குட்டி உடையில் கியூடான புகைப்படம் உங்களுக்காக!
டூவீலர் - பள்ளி வேன் மோதி பயங்கர விபத்து; விவசாய பணிக்கு சென்ற இருவர் பரிதாப பலி.!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை, தேரளாப்பூர் பகுதியில், இன்று இருசக்கர வாகனம் சென்று கொண்டு இருந்தது. அந்த வாகனத்தில், கும்பகோணம், கண்ணங்குடி பகுதியில் வசித்து வரும் 3 பேர், விவசாய பணிகளுக்காக ஒரே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தனர்.
அப்போது, இவர்களின் வாகனம் எதிர்திசையில் தேவகோட்டை நோக்கி பயணம் செய்த தனியார் பள்ளி வேனின் மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த முத்து கிருஷ்ணன் (37), பழனி (வயது 45) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: மஞ்சவிரட்டை வேடிக்கை பார்க்கச் சென்று நேர்ந்த சோகம்; முதியவர் பரிதாப பலி.!
2 பேர் பலி
மேலும், மற்றொரு நபர் படுகாயம் அடைந்து உயிருக்கு துடிதுடித்துள்ளார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு காயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தோரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
ஒரே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த மூவரும் தலைக்கவசம் அணியாத நிலையில், வாகனம் விபத்தில் சிக்கியதால் அதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திரைப்பட பாணியில் பயங்கரம்.. கல்லைக்கட்டி கடலுக்குள் வீசி மீனவர் கொலை.!