மஞ்சவிரட்டை வேடிக்கை பார்க்கச் சென்று நேர்ந்த சோகம்; முதியவர் பரிதாப பலி.!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டிப்பட்டி கிராமத்தில், இன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மஞ்சுவிரட்டு போட்டிக்காக பல ஊர்களைச் சேர்ந்த காலைகும் அழைத்து வரப்பட்டு இருந்தன.
இதனிடையே, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி, திடீரென 5 காளைகள் அவிழ்த்து விடப்பட்டதாக தெரியவருகிறது. அப்போது, காளைகள் மிரண்டு சிதறி ஓடி இருக்கின்றன.
பார்வையாளர் பரிதாப பலி
இந்த சம்பவத்தில் காளை வயோதிகர் ஒருவரை முட்டிய நிலையில், அவர் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில், அவர் குன்றக்குடி, கோஓரட்டி கிராமத்தில் வசித்து வரும் சண்முகம் (வயது 71) என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: 6 மாதம் போராடி பிரிந்த தலைமை காவலரின் உயிர்; விபத்தில் சிக்கி நடந்த சோகம்.!
அவரின் உடல் காவல்துறையினரால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சுடுதண்ணீரில் விழுந்து துடிதுடித்து உயிரிழந்த 3 வயது சிறுமி; சென்னையில் சோகம்.!