பள்ளி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் அரங்கேறிய கொடுமை.. பகீர் சம்பவம்.!



in Namakkal 14 Year Old Girl Sexually Abused by 22 Year Old Man 

சிறுமி மாயமானது தொடர்பான புகாரை விசாரித்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது.

மாயம்:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம், சிவியாம்பாளையம் ஊராட்சியில் 14 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இதனிடையே, ஜூன் 29ம் தேதி சிறுமி மாயமான நிலையில், இதுகுறித்து பெற்றோர் சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே, சிறுமி கடந்த ஜூலை 2ம் தேதி மாணவி நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்டார். 

இதையும் படிங்க: 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. உடல்நலம் குன்றிய நண்பரை பார்க்கச் சென்றபோது பயங்கரம்.! சென்னையில் ஷாக்.!

இன்ஸ்டாகிராம் பேச்சு:

பின் மாணவியிடம் விசாரணை நடந்தபோது, சேலம் மாவட்டம் மேச்சேரி, புங்கான்பட்டியில் வசித்து வரும் சென்ரிங் தொழிலாளி தமிழரசன் (வயது 22), அவரின் நண்பர் பிரதாப் (வயது 23) ஆகியோர் சில மாதங்களுக்கு முன்னதாக மாணவியின் ஊருக்கு செண்டரிங் வேளைக்கு வந்துள்ளனர். தமிழரசன் சிறுமியுடன் பழக்கத்தை ஏற்படுத்தி, இன்ஸ்டாகிராமில் பேசி வந்துள்ளார்.

namakkal

கூட்டுப்பாலியல் வன்கொடுமை:

பின் சிறுமியை சந்திக்க வேண்டும் என கூறிய நிலையில், நள்ளிரவில் வீட்டில் இருந்து வெளியேறிய சிறுமி சேலம் பேருந்து நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கு காத்திருந்த தமிழரசன் மாணவியை மேச்சேரி அழைத்துச் சென்று நண்பர் பிரதாப்புடன் சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். விசாரணைக்குப்பின் அதிகாரிகள் குற்றவாளிகள் இருவரையும் போக்ஸோவில் கைது செய்தனர்.
 

இதையும் படிங்க: 5 நாட்களில் 30 பேரால் 13 வயது சிறுமி வன்கொடுமை.. நெஞ்சை உலுக்கும் திடுக் சம்பவம்.. பதறவைக்கும் வைக்கும் கொடுமை.!