கார் பிரேக் வயரை கட் செய்தது யார்! நீங்களா.. மரண பயத்தில் ரோகிணி..! சிறகடிக்க ஆசை புரோமோ.
இன்ஸ்டா காதலனுடன் திருமணம், இன்ஸ்டண்ட் தேனிலவு.. கம்பி நீட்ட முயன்றவரிடம் கறார் காட்டிய பெண் வீட்டார், காவல்துறையினர்.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டினம், ஒட்டப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் பெரியண்ணன். இவர் அக்னிபாத் இராணுவ வீரராக, மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2023 ம் ஆண்டில் பெரியண்ணனுக்கு, போச்சம்பள்ளி அருகேயுள்ள வடமலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்பட்ட அறிமுகம், இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவரையொருவர் போனில் பேசி உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், நேரில் சந்திக்கவும் ஆவல் அடைந்துள்ளனர். கடந்த பிப்.28 அன்று 15 நாட்கள் அவசர விடுமுறை வாங்கிய பெரியண்ணன், சொந்த ஊர் வந்து பெண்ணை தன்னுடன் அழைத்துச் சென்றார்.
இதையும் படிங்க: கள்ளக்காதலி இறந்த துக்கத்தால் சோகம்; கள்ளக்காதலன் விஷம் குடித்து உயிரை மாய்த்த விபரீதம்.!
கோவிலில் திருமணம்
ஏலகிரியில் உள்ள கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி, அங்கிருந்து தேனிலவு கொண்டாட ஊட்டி புறப்பட்டு சென்றது. ஊட்டியில் 5 நாட்கள் தேனிலவுக்கு பின்னர், பெரியண்ணன் மனைவியை தனது சொந்த ஊர் அழைத்து வந்தார். அங்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, பெரியண்ணன் நீ உனது வீட்டில் இரு. அடுத்த விடுமுறைக்கு வருகிறேன் என கூறியுள்ளார்.
அதிகாரிகள் எச்சரிக்கை
மேலும், பெண்ணின் தாலியையும் வாங்கிவிட்டு, பெண்ணை அவரின் வீட்டருகே கொண்டு சென்று விட்டுள்ளார். இதனை கவனித்த பெண்ணின் உறவினர்கள் பெரியண்ணனை சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும், பர்கூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அதிகாரிகள் திருமணம் செய்யாமல் புறப்பட்டால், பெண் வீட்டார் கொடுத்த புகாரில் பாலியல் வழக்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என கூறியுள்ளனர்.
இந்த தகவல் அறிந்த பெரியண்ணனின் பெற்றோர் பதறியபடி மகனை மீட்க வந்தனர். பின் மீண்டும் இருதரப்பு பெற்றோர் முன்பு தாலி கட்டப்பட்டு, அடுத்த விடுமுறைக்கு வரவேற்பு நிகழ்ச்சி வைத்துக்கொள்ளலாம் என பேசி முடிக்கப்பட்டு, பெண் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: #JustIN: 14 வயது சிறார்கள் கும்பலால், அக்கா-தங்கை பலாத்கார முயற்சி.. ஓசூரில் அதிர்ச்சி சம்பவம்..! ஐவர் கைது.!