5 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை; ஆபாச படம் பார்த்து 13 வயது சிறுவன் அதிர்ச்சி செயல்.. ஸ்மார்ட்போன் கொடுக்கும் பெற்றோரே கவனம்.!



in Kanyakumari Colachel 5 Year Old Minor girl Abuse 

 

வீட்டில் பகலில் தனியாக இருக்கும் சிறுவன், ஸ்மார்ட்போனில் ஆபாச படம் பார்த்து, சொந்த தங்கையான 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல், வெளிச்சந்தை பகுதியில் இருக்கும் கிராமத்தில், 30 வயது பெண்மணி வசித்து வருகிறார். இவருக்கு 13 வயதுடைய மகன், 5 வயது மகள் இருக்கின்றனர். 

இதையும் படிங்க: தமிழகமே ஷாக்.. பரிகாரம் செய்தும் பலிக்கவில்லை: ஜோதிடர் கூலிப்படை ஏவி கொலை - பெண் வெறிச்செயல்..!

கணவரை பிரிந்த பெண்

கணவரை பிரிந்த பெண்மணி தனது மகன், மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். பெண்மணி நாகர்கோவில் ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். 

காலையில் வேலைக்குச் செல்லும் பெண்மணி, பின் மாலையில் தான் வீட்டிற்கு வருவார். சமீபத்தில் பெண் வேலைக்கு சென்று வந்தபோது, சிறுமி அழுதுகொண்டு இருந்தார். 

kanyakumari

பாலியல் தொல்லை

மக்ளிடம் கேட்டபோதும் பதில் இல்லாத நிலையில், பெண்மணி அக்கம் பக்கத்தில் விசாரித்து இருக்கிறார். அப்போது, சிறுமியின் சொந்த அண்ணன், 13 வயது சிறுவன் தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை தெரிந்துகொண்டுள்ளார். 

மேலும், சிறுமியும் நடப்பது தெரியாமல் அழுது இருக்கிறார். இந்த விஷயம் குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், 13 வயது சிறுவன் மீது போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது ஆண்டவடிக்கை எடுக்கப்பட்டது. 

ஸ்மார்ட்போன் காரணம்

விசாரணையில், சிறுவன் ஸ்மார்ட்போனில் ஆபாச படங்களை பார்த்து வந்துள்ளார். அதில் வரும் ஆபாச படங்களை பார்த்து இவ்வாறான செயலை மேற்கொண்டது தெரியவந்தது. இதனால் சிறார்களிடம் பெற்றோர் ஸ்மார்ட்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: செல்போன் மாயமான தகராறில் பயங்கரம்; தொழிலாளி கழுத்தறுத்து கொலை.!