16 வயது சிறுமியை சீரழித்த சிறுவன்.. உடந்தையாக இருந்த பெற்றோர் கைது.!
சிறுவனான மகனின் காதலுக்கு உடந்தையாக இருந்த பெற்றோர் போக்ஸோவில் கைதாகினர்.
மாயம்:
தேனி மாவட்டத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமி, கடந்த சில நாட்களுக்கு முன் மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தேனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அதிகாரிகள் அவரை தேடி வந்தனர்.
இதையும் படிங்க: ஆபாச வார்த்தைகளுடன் 15 வயது சிறுமிக்கு காதல் தொல்லை.. 48 வயது ஆட்டோ ஓட்டுநர் அதிர்ச்சி செயல்.!
சிறுவன்:
இதனிடையே, தேனியில் வசித்து வரும் 16 வயது சிறுவன், சிறுமியை காதலிப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளது விசாரணையில் அம்பலமானது. சிறுவன் சிறுமியை திண்டுக்கல்லுக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார்.

தப்பினார்:
சிறுமி இருக்கும் இடம் அறிந்து காவல்துறையினர் விரைந்து சென்ற நிலையில், சிறுவன் தப்பி இருக்கிறார். அங்கிருந்து சிறுமியை மீட்ட காவல்துறையினர், சிறுவனை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சிறுவனின் பெற்றோர் உடந்தையாக இருப்பது தெரியவந்ததால், அவர்களின் மீது போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: போதை ஊசி செலுத்திய இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. கேடுகெட்ட பழக்கம் உயிர்பறித்த துயரம்.!