கார் - கண்டைனர் லாரி மோதி சோகம்; 2 கல்லூரி மாணவர்கள் பலி.!



in-chennai-kilambakkam-accident-2-died

 

சென்னையில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, ஊரப்பாக்கம் பகுதியில் காரில் 5 மாணவர்கள் பயணம் செய்தனர். நண்பர்களான அனைவரும் காரில் புறப்பட்டுச் சென்றபோது, கார் - கண்டைனர் லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், கண்டைனர் மீது மோதி இருக்கிறது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த தினேஷ் ரெட்டி, ஷ்ரேயர்ஸ் ஆகிய இரண்டு மாணவர்கள், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதையும் படிங்க: கண்டைனர் லாரி சக்கரத்தில் சிக்கி நேர்ந்த சோகம்; இளைஞர் தலை நசுங்கி மரணம்.!

chennai

இருவர் பலி, 2 பேர் கைது

காரின் பின்புறம் இருந்த முகமது, உமா, ஹரிணி ஆகியோர் படுகாயத்துடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உயிரிழந்த மாணவர்களின் உடலை எம்கேட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தாம்பரம் காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: நான் என்ன தீவிரவாதியா? டென்சனில் தமிழிசை., சாலையில் இறங்கி போராட்டத்தில் குதித்த பாஜக தொண்டர்கள்.. சென்னையில் பரபரப்பு.!