எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க விருப்பமே இல்லை.! ஆனால்.. ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை!!
வேறொரு நபருடன் மனைவி டூவிலரில் செல்வதை பார்த்து கணவர் செய்த அதிரடி செயல்... போலீசார் விசாரணை!!
வேறொரு நபருடன் மனைவி டூவிலரில் செல்வதை பார்த்து கணவர் செய்த அதிரடி செயல்... போலீசார் விசாரணை!!
திண்டுக்கல் சாலைப்புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரதீப் குமார் - நந்தினி தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நந்தினி தனது அலுவலக பணியை முடித்து தனது சக ஊழியரான அசோக் குமார் என்பவருடன் டூவிலரில் வீடு திரும்பியுள்ளார். இதனை எதர்ச்சையாக அவ்வழியாக வந்த நந்தினியின் கணவர் பிரதீப் பார்த்து ஆத்திரமடைந்துள்ளார். அதுமட்டுமின்றி கோபத்தில் வேகமாக தனது காரை ஓட்டி சென்று மனைவி சென்ற டூவிலரில் மோதியுள்ளார்.
அதில் கீழே விழுந்து படுகாயமடைந்த நந்தினியை மட்டும் காரில் தூக்கி கொண்டு சென்றுள்ளார். படுகாயமடைந்த அசோக் குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நந்தினியை கடத்திச் சென்ற பிரதீப்பை துப்புச்சம்பட்டி மக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் பிரதீப் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.