மனைவியையும், குழந்தையையும் உயிருடன் கொளுத்த முயன்ற கணவன்!. குடும்பத்தோடு சேர்ந்து செய்த கொடூரம்!.
மனைவியையும், குழந்தையையும் உயிருடன் கொளுத்த முயன்ற கணவன்!. குடும்பத்தோடு சேர்ந்து செய்த கொடூரம்!.
திருவாரூர் மாவட்டம் வாசன் நகரில் வசித்து வருபவர் கிஷோர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு மன்னார்குடியை சேர்ந்த ஜெயநந்தினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
கிசோர் தன்னுடைய தொழிலை விரிவுபடுத்துவதற்காக ஜெயநந்தினியிடம் ரூ.20 லட்சம் பணம் கேட்டுள்ளார். பணம் பெறுவதற்காக நந்தினியும் தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்றைய தினம் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது கிஷோர், மாமியார், மாமனார், நாத்தனார் ஆகியோர் நந்தினியிடம் பணம் கேட்டுள்ளனர். தற்போது பணம் இல்லை என நந்தினி கூற, ஆத்திரமடைந்த கிசோர் அரிவாளால் நந்தினியை வெட்டியுள்ளார்.
இதனையடுத்து நந்தினி மற்றும் அவருடைய குழந்தையின் மீது மண்ணெண்னையை ஊற்றிய மாமியாரும், நாத்தனாரும் இருவரையும் எரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் நந்தினி, மற்றும் குழந்தையை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தலைமறைவான கிசோர் மற்றும் அவருடைய குடும்பத்தாரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.