மனைவியின் கழுத்தை ஆக்ஸா பிளேடால் அறுத்து கொலை செய்ய முயன்ற கணவர்.!

மனைவியின் கழுத்தை ஆக்ஸா பிளேடால் அறுத்து கொலை செய்ய முயன்ற கணவர்.!



husband murder attempt to his wife

தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ஆண்டனி ராஜ் என்பவர் சில வருடங்களுக்கு முன்பு மாதவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து செய்துள்ளார். ஆண்டனி ராஜ் மதுபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. மதுபோதையில் ஆண்டனி ராஜ் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று வெளியில் சென்றுகொண்டிருந்த மாதவியை ஆண்டனி ராஜ்  வழிமறித்து தனது மனைவியின் கழுத்தை ஆக்ஸா பிளேடால் அறுத்து கொலை செய்ய முயன்றார். இதில் காயமடைந்த மாதவி அலறல் சத்தம் போட்டுள்ளார். இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மாதவியை காப்பாற்றினர்.

இதனையடுத்து ஆண்டனி ராஜ்  அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். பலத்த காயமடைந்த மாதவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவான ஆண்டனி ராஜை தேடி வருகின்றனர். பட்டப் பகலில் நடு ரோட்டில் நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.