மனைவி தன்னுடன் வராததால் வீட்டிற்கு தீ வைத்த கணவன்.!



Husband fired wife House in Cuddalore

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெகன். இவர் பெயிண்டர் ஆக வேலை செய்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அபிராமி அருகில் இருக்கும் தனது சித்தி வீட்டிற்கு சென்று விட்டார்.

Cuddalore

இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி ஜெகன் தனது மனைவியை அழைத்து வருவதற்காக சென்று உள்ளார். ஆனால் கோபத்தில் இருந்த அபிராமி ஜெகனுடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

Cuddalore

இதனால் ஆத்திரமடைந்த ஜெகன் தகாத வார்த்தைகளால் திட்டி கூரை வீட்டிற்கு தீ வைத்துள்ளார். இதனால் வீட்டில் பாதி அளவு எரிந்து சாம்பலானது. இது குறித்த குறித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.