மனைவிக்கு மணமகன் தேவை.. விளம்பரம் கொடுத்த கணவன்.! பதறிப்போன மாமனார்.! அதிர்ச்சி காரணம்.!

மனைவிக்கு மணமகன் தேவை.. விளம்பரம் கொடுத்த கணவன்.! பதறிப்போன மாமனார்.! அதிர்ச்சி காரணம்.!


Husband advertised wanted groom for his wife

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே உளுந்தை கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகள் ஜான்சி (வயது 32). சாப்ட்வேர் என்ஜினீயரான ஜான்சிக்கு கடந்த 2016-ம் ஆண்டு பக்கத்துக்கு ஊரான வெள்ளியூர் கிராமத்தை சேர்ந்த ஓம்குமார் (34) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இதனையடுத்து ஜான்சிக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்ததை தொடர்ந்து தம்பதிகள் அமெரிக்காவில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். 

இந்த தம்பதிக்கு 4½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஓம்குமார் மனைவியை பிரிந்து அமெரிக்காவில் இருந்து சொந்த ஊரான வெள்ளியூருக்கு வந்துள்ளார். இந்த தம்பதி மூன்று வருடத்திற்கும் மேலாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வரும்நிலையில், ஓம்குமார் தனக்கு விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தற்போது இந்த வழக்கு நடந்து வருகிறது. 

இந்த நிலையில் ஓம்குமார் பிரபல திருமண தகவல் மையத்தில் ஜான்சிக்கு மணமகன் தேவை என தகவல் தெரிவித்து விளம்பரம் கொடுத்துள்ளார். ஆன்லைனில் இந்த விளம்பரத்தை பார்த்தவர்கள் ஜான்சியை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து ஜான்சியின் தந்தை பத்மநாபனை தொடர்பு கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தான் இதுபோல் எந்த ஒரு திருமண தகவல் மையத்திலும் விளம்பரம் செய்யவில்லை என்று தெரிவித்தார். 

ஆனாலும் அவருக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்ததால் இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் விவாகரத்து கிடைக்காத ஆத்திரத்தில் திருமண தகவல் மையத்தில் பொய்யான தகவல்களை ஜான்சியின் கணவர் ஓம்குமார் பதிவிட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஓம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.