மீண்டும் இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்து, உச்சத்தை தொட்ட தங்கம் விலை!

மீண்டும் இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்து, உச்சத்தை தொட்ட தங்கம் விலை!


gold rate increased

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வந்தது. கொரோனா தாக்கத்தால் உலக பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள நிலையில் பிற தொழில்களில் முதலீடு செய்ய பலரும் தயங்கி, தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கினர். இதன்காரணமாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்தது. 

 தற்போது ஆபரண தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த சில நாட்களாக பங்குச்சந்தைகளில் ஏற்றம் இறக்கம் காணப்படுவதைப் போலவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவுகிறது.

gold rate

இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.576 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.39,800 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.4,975 -க்கு விற்பனையாகிறது.