#Breaking: மொழியை திணிக்க நினைத்தால் பிரச்சனை தான் வரும் - முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி.!

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கட்சி நிர்வாகி ஒருவருக்கு பளார் விட்டார். இதுதொடர்பான பிரச்சனைக்கு பின், அவர் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜனை கடுமையாக சாடி பேசியிருந்த சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பான விவாதம் அதிமுகவில் உட்கட்சியிடயே விமர்சனத்தை எதிர்கொண்டது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர், விருதுநகர் மேற்கு அதிமுக மாவட்ட செயலாளர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, இன்று கோவை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.
இதையும் படிங்க: திமுக அமைச்சருடன் அதிமுக நிர்வாகிகள் நெருக்கமா? திருச்சி மாவட்ட நிர்வாகிகளை கடிந்த இபிஎஸ்.!
மொழித்திணிப்பு பிரச்சனைக்கு வழிவகை செய்யும்
அப்போது, அவர் பேசுகையில், "அதிமுகவின் கொள்கை இருமொழிக்கொள்கை மட்டுமே. மூன்றாவது மொழி என வேறொன்றை திணிக்க கூடாது. மத்திய அரசு அழுத்தம் கொடுப்பது, பிற பிரச்சனையை ஏற்படுத்த காரணமாக அமையும். மொழி ரீதியாக அழுத்தம் கொடுப்பது, கட்டாயம் பிரச்சனைக்கே வழிவகை செய்யும். அதிமுக, திமுகவுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் தனிப்பெருமான்மை உண்டு.
பிரச்சனை முடிந்தது
மாபா பாண்டியராஜனை நான் குறை ஏதும் சொல்லவில்லை. அது முடிந்துவிட்ட பிரச்சனை. பாராளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். குறைக்க கூடாது. திமுகவை அதிமுக எதிர்க்கும், அதிமுகவை திமுக எதிர்க்கும். இரண்டு கட்சிகளுக்கும் மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனை என்பது இயல்பானது.
முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும்போது, ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் ஒவ்வொரு நிலைப்பாடை கொண்டு இருப்பார். அது அவரின் இயல்பு" என கூறினார்.
இதையும் படிங்க: ராஜேந்திர பாலாஜி Vs பாண்டியராஜன்.. மேடையில் ஆவேச பேச்சு.. அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்.!