விஜய் டிவி ராசித்தா ரசிகரா நீங்க!!! குட்டி உடையில் கியூடான புகைப்படம் உங்களுக்காக!
ராஜேந்திர பாலாஜி Vs பாண்டியராஜன்.. மேடையில் ஆவேச பேச்சு.. அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்.!

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், கட்சியின் நிர்வாகிக்கு பளார் விட்டு இருந்தார். இத்தொடர்பான செய்திகள் வெளியாகி கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இதனிடையே, முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர் மா. பொ பாண்டியராஜனுக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில், சிவகாசியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய சம்பவம் நடந்துள்ளது.
குறுநில மன்னர்
இதுதொடர்பாக அமைச்சர் பேசுகையில், "கட்சி தனக்கு மதிப்பு தரவேண்டும் என கூறும் நபர்கள், கட்சிக்காக என்ன செய்தார்கள்?. தடை என்பது இருந்தால், அதனை வெட்டி எறியவும் தயங்கமாட்டடேன். பாண்டியராஜன் சொல்வதைப்போல நான் குறுநில மன்னர் தான். மிதித்து தள்ளிவிடுவேன்.
இதையும் படிங்க: பொன்னாடை போர்த்த வந்த நிர்வாகிக்கு பளார் விட்ட முன்னாள் அமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜி.. அதிமுக பொதுக்கூட்டத்தில் ஷாக்.!
விருதுநகரில் வந்து சொல்லட்டும்
எனக்குள் அதிமுக ரத்தம் ஓடுகிறது. உனக்குள் என்ன ஓடுகிறது? என் உயிரினும் மேலாக, நான் தெய்வமாக மதிக்கும் ஜெயலலிதாவை பாண்டியராஜன் அவதூறாக பேசினார். அந்த வீடியோ என்னிடம் இருக்கிறது. நான் இருக்கும்போதே, பாண்டியராஜனுக்கு சால்வை போட்டால் வேடிக்கை பார்ப்பதா?. நான் குறுநில மன்னர் என விருதுநகரில் வந்து பாண்டியராஜனால் சொல்ல முடியுமா?" என பேசினார்.
முன்னாள் அமைச்சருக்கு எதிராக இருதரப்பு வாதம் காரணமாக அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: #Breaking: கார் விபத்தில் அதிமுக புள்ளி உட்பட 3 பேர் பலி.. கார் - லாரி நேருக்கு நேர் மோதி சோகம்.!