விஜய் டிவி ராசித்தா ரசிகரா நீங்க!!! குட்டி உடையில் கியூடான புகைப்படம் உங்களுக்காக!
திமுக அமைச்சருடன் அதிமுக நிர்வாகிகள் நெருக்கமா? திருச்சி மாவட்ட நிர்வாகிகளை கடிந்த இபிஎஸ்.!

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை இழந்த அதிமுக, 2026 சட்டப்பேரவை தேர்தலில் எபப்டியெனும் ஆட்சியை கைப்பற்ற முயற்சித்து வருகிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு எஞ்சியுள்ள நிலையில், கட்சியினரை கட்சிக்காக பணியாற்ற தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆன்லைன் வாயிலாக மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்கும் கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: போதையில் பெண்கள் முன் சீன் போட்ட இளைஞன்.. அதிகரிக்கும் பளார்.. கிருஷ்ணகிரியில் ஷாக்.!
எடப்பாடி கண்டிப்பு
அப்போது, திருச்சி மாவட்ட நிர்வாகிகளை எடப்பாடி பழனிச்சாமி கடிந்துகொண்டதாக தெரியவருகிறது. திருச்சி மாவட்ட அதிமுக நிரவகிகள், தற்போது அமைச்சர் பொறுப்பில் இருப்பவரிடம் நெருக்கம் காண்பித்து வருவதாக தலைமைக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விஷயத்தை நேரடியாக குறிப்பிட்டே எடப்பாடி பழனிச்சாமி திருச்சி மாவட்ட நிர்வாகிகளை கடிந்துகொண்டதாக கூறப்படுகிறது. அதிமுக கட்சியினர் தங்களின் சொந்த விருப்பு-வெறுப்புகளை மறந்து, கட்சியின் எதிர்காலத்துக்காக உழைக்க வேண்டும் எனவும் இபிஎஸ் தரப்பில் நிர்வாகிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: துப்புரவு பணியாளரின் நேர்மை.. நகையை ஒப்படைத்த பெண்ணுக்கு குவியும் பாராட்டு.!