எலக்ட்ரிக் பைக் சார்ஜ் செய்யும்போது பேட்டரி வெடித்ததில் தந்தை, மகள் உயிரிழப்பு.! சோக சம்பவம்.!



father and daughter died in electric bike fire

வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் துரைவர்மா. இவர் அதே பகுதியில் போட்டோ ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் ரூ.95 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரிக் பைக்கை வாங்கி உள்ளார்.

இந்தநிலையில் நேற்று இரவு அவர் புதிதாக வாங்கிய எலக்ட்ரிக் பைக்கிற்கு வீட்டில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியுள்ளார். இந்தநிலையில் அந்த எலக்ட்ரிக் பைக்கில் இருந்த பேட்டரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பைக் முழுவதுமாக எரியத் துவங்கியது. மேலும், அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த மற்றொரு பெட்ரோல் இருசக்கர வாகனத்தில் தீ பற்றி வந்த வாகனம் முழுவதுமாக எரிந்து நாசமானது.

மேலும், வீட்டிலும் தீ பரவியதில் வீடு முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. புகைமூட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் துரைவர்மா மற்றும் அவரது மகள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இறைவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.