குடும்பத் தகராறு.. கோபித்துக் கொண்டு சென்ற மனைவி.. விரக்தியில் கணவன் எடுத்த விபரீத முடிவு...!

குடும்பத் தகராறு.. கோபித்துக் கொண்டு சென்ற மனைவி.. விரக்தியில் கணவன் எடுத்த விபரீத முடிவு...!



family-dispute-angry-wife-carried-away-desperate-husban

கோவை மாவட்டம் காங்கேயம் பாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் அழகேஸ்வரன் - கவிதா தம்பதியினர். அழகேஸ்வரன் கூலி வேலை செய்து வருபவர். இவர் குடிக்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கவிதா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவர் அழகேஸ்வரனிடம் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனவேதனையில் இருந்து வந்த அழகேஸ்வரன் நேற்று முன்தினம் வீடு தெளிக்க வைத்திருந்த மஞ்சள் சாயத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Family Dispute

 இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அழகேஸ்வரன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அழகேஸ்வரன் தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.