அத்திவரதர் தரிசனத்திற்கு நின்ற பக்தர்களுக்கு நேர்ந்த விபரீதம்.! 50 பேர் பாதிப்பு!!
அத்திவரதர் தரிசனத்திற்கு நின்ற பக்தர்களுக்கு நேர்ந்த விபரீதம்.! 50 பேர் பாதிப்பு!!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தருகிறார். அந்த வகையில் தற்போது இந்த ஆண்டு மிகவும் கோலாகலமாக தரிசனம் நடைபெற்று வருகிறது.
மேலும் கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதியில் இருந்து அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அவரை தரிசனம் செய்ய இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடிவருகின்றனர்.
முதல் 31 நாட்கள் சயனகோலத்தில் அருள்பாலித்த அத்திவரதர் தற்போது நின்றகோலத்தில் காட்சி தருகிறார். இந்நிலையில் வரும் ஆகஸ்டு 17 ம் தேதி வரை நின்ற கோலத்தில் அத்திவரதர் தரிசனம் தருவார் என்றும், 18 ம் தேதி அதிகாலை அத்திவரதர் சிலை மீண்டும் குளத்தில் வைக்கப்படும் என்றும் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில் விஐபி பாஸ் மூலம் முக்கிய நபர்கள் தரிசப்பது ரத்து செய்யப்படுகிறது. பொது தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் 13, 14, 16-ம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மதியம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு நின்றநிலையில் அந்த பகுதியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்தது. இதில் 50 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 5பேர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.