யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது..! கடுப்பான எடப்பாடி பழனிச்சாமி.!

யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது..! கடுப்பான எடப்பாடி பழனிச்சாமி.!



edapadi palanisami talk about dmk

கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் நடைபெற்ற மே தின விழா கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்து பதினோரு மாதம் நிறைவடையும் நிலையில் எவ்வித திட்டங்களையும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவையும் கட்டிமுடிக்கப்பட்ட பணிகளுக்கு திறப்பு விழாவை மட்டுமே முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார்.

சட்டமன்றத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என 11 மருத்துவக்கல்லூரிகள் கொண்டு வந்ததாக அப்பட்டமாக பொய் சொல்கிறார்.  அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசிடம் பேசி 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தோம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கி மருத்துவ கல்லூரி கொண்டு வந்ததே அதிமுக தான். திமுக தலைவர் கருணாநிதி உயிரோட இருக்கும்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்படவில்லை ஆனால் கருணாநிதி கூறியதை போல் திமுக மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்ததாக அப்பட்டமாக பொய் சொல்கின்றனர். யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது எனவும் பேசினார்.