நவீன கருவி மூலம் கொரோனா சோதனை தொடங்கியது! சோதனை குறித்து விளக்கிய மருத்துவர்!



doctor-talk-about-corona-test

இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால் தொடர்ந்து மக்களிடையே கொரோனா பாதிப்பு பற்றி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் உடனடியாக முடிவுகள் தெரிவதற்கு போதிய மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் இந்தியாவில் இல்லை என்பதால் உபகரணங்கள் வாங்குவதற்கு சீனாவிடம் இந்தியா ஆர்டர் கொடுத்திருந்தது. இந்தநிலையில், கொரோனா பரிசோதனைக்கு தேவையான 6.5 லட்சம் மருத்துவ உபகரணங்கள், சீனாவின் குவாங்சூ விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டன.

அவற்றில் கொரோனா பரிசோதனைக்கான மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட 12 ஆயிரம் ராபிட் பரிசோதனை கிட்கள் (rapid kits) தமிழகம் வந்தடைந்தன. இதனையடுத்து கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் துரித பரிசோதனை கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

corona

இந்த பரிசோதனை குறித்து மருத்துவர் கூறுகையில், ரேபிட் டெஸ்ட் கிட் கருவி என்பது ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா, இல்லையா என்பதை விரைவாக கண்டுபிடித்து தெரிவிக்கும் கருவி எனவும், இந்த கருவியில் 2 குமிழ்கள் உள்ளன. இதில் ஒரு குமிழில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவரின் விரல் நுனியில் இருந்து சேகரிக்கப்படும் ஒரு துளி ரத்தம் இடப்பட்டு, மற்றொரு குமிழில் ‘கன்ட்ரோல் சொல்யூசன்’ எனும் திரவம் ஒரு துளி விடப்படும்.

இந்த பரிசோதனையின் முடிவு 25 நிமிடங்களில் நமக்கு தெரிய வந்துவிடும். கொரோனா சோதனை செய்யப்பட்ட நபருக்கு, கருவியில் உள்ள திரையில் ஒரு கோடு வந்தால் கொரோனா தொற்று இல்லை என அறியலாம். 2 கோடுகள் வந்தால் அந்த நபருக்கு கொரோனா தொற்று இருக்கிறது என்று உறுதி செய்யப்படும் என மருத்துவர் தெரிவித்தார்.