சிகிச்சைக்கு சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டல்.. மருத்துவர் கைது!

சிகிச்சைக்கு சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டல்.. மருத்துவர் கைது!



Doctor arrested for harassment to girl in Trichy

திருச்சியில் 16 வயது சிறுமி இடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மருத்துவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 16 வயதில் சிறுமி வருவதற்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க ஸ்கேன் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

trichy

இந்த நிலையில் கடந்த மார்ச் ஐந்தாம் தேதி புத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டருக்கு, சிறுமியை அழைத்து சென்றுள்ளனர். அப்போது ஸ்கேன் எடுத்த போது அங்கிருந்த 51 வயதான ரவி என்ற மருத்துவர் சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து உடனடியாக சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மருத்துவரை கைது செய்தனர்.