சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு நடுரோட்டில் அரிவாள் வெட்டு.. பழனியில் பரபரப்பு.!

சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு நடுரோட்டில் அரிவாள் வெட்டு.. பழனியில் பரபரப்பு.!


Dindigul Palani Special Police Sub Inspector Murder Attempt By Strangers

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அடிவார காவல் நிலையத்தில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சந்தான கிருஷ்ணன். இவர் நேற்று தனது நண்பர் ஆனந்தத்துடன், சாலையில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். 

அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் சந்தான கிருஷ்ணனை அரிவாளால் வெட்ட முயற்சித்தனர். இதனை தடுக்க முயன்ற போதிலும், அவர்கள் தலையில் வெட்டியுள்ளனர். மேலும், ஆனந்திற்கும் வெட்டு விழுந்துள்ளது. 

Dindigul

இதனால் படுகாயமடைந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இந்த விஷயம் குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. மர்ம நபர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளது.