ஒரு பாடத்துல பெயில் ஆகிட்டேன்.. சித்த மருத்துவக்கல்லூரி மாணவி விபரீத முடிவு.! பறிபோன உயிர்.!!

ஒரு பாடத்துல பெயில் ஆகிட்டேன்.. சித்த மருத்துவக்கல்லூரி மாணவி விபரீத முடிவு.! பறிபோன உயிர்.!!


Dharmapuri Marandahalli Siddha Medicine Girl Student Suicide due to Fail one Subject in Exam

சித்த மருத்துவக்கல்லூரி மாணவி சமீபத்தில் நடைபெற்ற தேர்வில் தோல்வியடைந்ததால், மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாரண்டஅள்ளி, சாமனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரின் மகள் விஷ்ணு பிரியா (வயது 19). இவர் சேலத்தில் செயல்பட்டு வரும் தனியார் சித்த மருத்துவ கல்லூரியில் மூன்றாம் வருடம் பயின்று வந்துள்ளார். 

சமீபத்தில் கல்லூரியில் நடைபெற்ற தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில், விஷ்ணு பிரியா ஒரு பாடத்தில் தோல்வியுற்றுள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுடன் அவர் காணப்பட்டு வந்துள்ளார். 

Dharmapuri

இந்நிலையில், பாடத்தில் தோல்வியுற்றதால் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற விபரீத எண்ணத்திற்கு சென்ற மாணவி, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். கிணற்றில் யாரோ குதிப்பது போன்ற சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், மாணவி உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

பின்னர், அங்கிருந்த இளைஞர்கள் உதவியுடன் சிறுமி மீட்கப்பட்ட நிலையில், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மாரண்டஅள்ளி காவல் துறையினர், தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.