வயலில் தண்ணீர் பாய்ச்ச சென்றவர்களுக்கு நேர்ந்த பயங்கரம்! ரத்த வெள்ளத்தில் அலறிய சகோதரர்கள்…. கடலூரை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!!!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வயலுக்கு தண்ணீர் பாய்ச்சச் சென்ற உறவினர்கள் இருவர் மர்மக் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் நிலத் தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
வயலில் பதுங்கிய கும்பலின் கொடூரத் தாக்குதல்
சிதம்பரம் அருகேயுள்ள பால்வார்த்துண்ணான் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (44) மற்றும் அவரது சித்தப்பா மகன் ராமகிருஷ்ணன் (36) ஆகியோர் நேற்று இரவு வயலில் உள்ள மோட்டார் கொட்டகைக்கு தண்ணீர் பாய்ச்சச் சென்றிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மர்ம நபர்கள் இருவரையும் வழிமறித்து கூர்மையான ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கடலூரில் பயங்கரம்.. சகோதரர்கள் வெட்டிக்கொலை.. உறவினர்கள் கொந்தளிப்பு.. பதற்றம்.! காவல்துறை குவிப்பு.!
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த உறவினர்கள் விரைந்து சென்று இருவரையும் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
நில வழக்கு பின்னணி குறித்து விசாரணை
தகவலறிந்த போலீசார் மற்றும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினர். தகவலின்படி, உயிரிழந்தவர்களுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் நீண்ட நாட்களாக கொலை சம்பவத்துக்கு காரணமாக இருக்கக்கூடிய நிலம் தொடர்பான முன்விரோதம் இருந்து வந்ததுடன், அது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை
இதையடுத்து, இந்த இரட்டைக் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்னை காதலிக்க மாட்டியா? நீ உயிரோட இருக்க வேண்டாம்.. சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம்.!