திருமணம் அப்போதுதான்.. ஓப்பனாக போட்டுடைத்து நடிகை சதா சொன்ன விஷயம்.! ரசிகர்கள் ஷாக்!!
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு, 8 பேர் பலி! சென்னையில் மட்டும் எவ்வளவு?

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, இந்தியாவில் நான்காவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தவண்ணம் உள்ளது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,491 ஆக இருந்தது. இந்த கொடூர வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்திருந்தது.
இந்தநிலையில், தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 765 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 8 பேர் கொரோனாவால் பலியானதை அடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 587பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10576 ஆக உயர்ந்துள்ளது.