தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,22,350 ஆக உயர்வு! இன்று ஒரே நாளில் புதிதாக 3,756 பேருக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,22,350 ஆக உயர்வு! இன்று ஒரே நாளில் புதிதாக 3,756 பேருக்கு தொற்று உறுதி!


corona-increased-in-tamilnadu-2R3GT8


கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,22,350 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 1,261 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு என்ணிக்கை 21,766 ஆக அதிகரித்துள்ளது. 

corona

தமிழகத்தில் இன்று 3,051 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  74,167 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 46,480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று  64 பேர் உயிரிழந்த நிலையில்  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ளது.