#BigBreaking: அடுத்த 3 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

#BigBreaking: அடுத்த 3 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!



chennai-rmc-announce-rain-next-3-hours

காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உட்பட 9 மாவட்டங்களில் 3 மணிநேரத்திற்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தின் கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பல மாவட்டங்களில் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

chennai

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வரும் 3 மணிநேரத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.