நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
ஐயோ... அந்த 1 வயசு குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு! திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!!
சென்னை பள்ளிக்கரணை அடுத்த சுண்ணாம்பு கொளத்தூர் பகுதியில் திருமணமாகி இரண்டே ஆண்டுகளில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புவனேஸ்வரி என்ற அந்தப் பெண்ணுக்கு ஒரு வயது குழந்தை உள்ளது. கணவர் மற்றும் மாமியார் தரப்பினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சுண்ணாம்பு கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரிக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆனதாக கூறப்படுகிறது. திருமணத்துக்குப் பிறகு கணவர் மற்றும் மாமியார் உள்ளிட்டோர் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, வரதட்சணை தொடர்பாக அவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் புகார் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: கடந்த வருடம் 6 வயது குழந்தை... இப்போ மனைவி! அடங்காத வெறியால் ஜாமீனில் வெளியே வந்து கணவன் செய்த பயங்கரம்! வங்கியில் நடந்த பரபரப்பு சம்பவம்…!!!
வரதட்சணை கொடுமை என குடும்பத்தினர் புகார்
இந்த நிலையில், புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். ஒரு வயது குழந்தையை விட்டுவிட்டு அவர் உயிரிழந்தது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வரதட்சணை கொடுமை காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறி உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று புவனேஸ்வரியின் உடலைக் கைப்பற்றினர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, பள்ளிக்கரணை போலீசார் வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மேலும், தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் கணவர் மற்றும் மாமியார் தரப்பினரை போலீசார் தேடி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனி கொண்டாட்டம் தான்... செப்டம்பர் 1-ம் தேதி முதல் குடிமகன்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...! அமலுக்கு வரும் அதிரடி லிஸ்ட்...!!!